Success in my Habit

Wednesday, September 30, 2020

ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி உதவி செய்த பாலகிருஷ்ணன் பெளண்டேசன்.

சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இன்னொகைஸ் இந்தியா நிறுவனமானது ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் 
ஒரு அங்கமாக பாலகிருஷ்ணன் பெளண்டேசன் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை மக்களின் வறுமையே போக்கும் நோக்கிலும் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஏழை மாணவர்களின் 
மேற்படிப்பு செலவிற்காகவும் உதவும் நன்னோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனராகவும், நிறுவன தலைவராகவும் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் இருந்து 
வருகிறார்கள். ஏழைகளின் துயர் துடைக்கும் தூய உள்ளம் கொண்ட திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்த நற்சேவைகளை பாலகிருஷ்ணன் பெளண்டேசன் என்ற அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் பன்னிரண்டாவது  வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களுக்கு அவர்களின் மேற்படிப்பு செலவிற்காக ரூ. 10000 வீதம் நான்கு மாணவர்களுக்கு ரூ. நாற்பதாயிரத்தை மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு S.S. சரவணன் முன்னிலையில் அவரது பொற்கரங்களால் பாலகிருஷ்ணன் பெளண்டேசன் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிறகு சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்த பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன்-க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

No comments: